மத்திய பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தனது மனைவியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து, காவல்துறையிடம் நீதி கேட்டுள்ளார். அவரது மனைவி பக்கத்து வீட்டு இளைஞனுடன் காதல் உறவு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிங்ரௌலி மாவட்டத்தின் பைட்ன் தாணா கோதவாலியில் சந்தோஷ் குப்தா என்ற இளைஞன் ஒரு மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து சந்தோஷ் கொடுத்த மனுவில், “எனது மனைவி மற்றும் ராஜேஷ் வர்மாவிற்கிடையே காதல் உறவு உள்ளது. நான் இல்லாதபோது அவர்கள் அடிக்கடி சந்திப்பதுண்டு. குழந்தைகளை அடித்து தாக்குகிறார். இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள், அப்போது நானும் குழந்தைகளும் உயிர் தப்பலாம்” என்று கோரியுள்ளார்.