ஹரியானா மாநிலம் ரேவாடி நகரத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில், சாலையெங்கும் மீன்கள் பரவி கிடந்த காட்சி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலில் இதைப் பார்த்தவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவே இல்லை. சாலையில் திடீரென மீன்கள் குவிந்தது எப்படி என்று அனைவரும் பேசத் தொடங்கினர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் அவதிப்பட்டனர். “இவ்வளவு மீன்கள் சாலையில் எங்கிருந்து வந்தன?” என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும் இந்தக் காட்சியைக் கண்டு வியப்பும் குழப்பமும் அடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், சாவன் பாலம் அருகே நிகழ்ந்தது.
हरियाणा के रेवाड़ी जिले के बावल क्षेत्र में दिल्ली-जयपुर हाईवे पर ₹3 लाख कीमत का मछली लदा पिकअप ट्रक पलट गया
◆ मछलियां सड़क पर बिखर गईं और लगभग सभी मर गईं, जिससे भारी ट्रैफिक जाम लग गया
◆ ड्राइवर मौके से फरार हो गया, पुलिस ने सड़क साफ की और उसकी तलाश शुरू कर दी#Rewari |… pic.twitter.com/hh7Bn5C3QJ
— News24 (@news24tvchannel) September 12, 2025
மீன்கள் சாலையில் குவிந்ததாக வந்த தகவலால், அங்கு மக்கள் கூட்டம் கூடியது. செய்தி காட்டுத்தீயாகப் பரவ, காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். பொதுமக்களை மீன்களிலிருந்து விலக்கி வைத்தனர். விசாரணையில், மீன்களை ஏற்றிச் சென்ற பிக்அப் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் இந்த நிலை ஏற்பட்டது தெரியவந்தது. மீன்கள் சாலையில் சிதறிக் கிடந்ததைக் கண்டு, பறவைகளும் வானில் வட்டமடிக்கத் தொடங்கின. காவல்துறையினர் உடனடியாக சாலையைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்து, போக்குவரத்தை சீராக்கினர். இந்த வாகனம் டெல்லியிலிருந்து மீன்களை ஏற்றிச் சென்றதாகவும், இந்த விபத்தில் வியாபாரிக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
