திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெறுகின்றது. அது மட்டுமல்லாமல் சென்னை, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.