தமிழகத்தில் இன்று (பிப்.02) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

சென்னை: மின் பராமாரிப்புப் பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெரம்பூர், செம்பியம் – காவேரி தெரு (1 முதல் 8-ஆவது தெரு வரை), தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, செம்பியம் முழுவதும், மாதவரம், பெரம்பூர் நெடுஞ்சாலை, கொடுங்கையூர், மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சேலம்: தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இன்று (02-02-2024) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தாரமங்கலம், காடம்பட்டி சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அதிராம்பட்டி, பவளத்தான்னுர், அத்திக்காட்டானூர் வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி போன்ற பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

நெத்திமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், 4ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

எடப்பாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடப்பாடி நகரம், வி. என். பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர். வேலம்மாவலசு, தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

கடலூர்: விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 230 கே. வி. டவர் லைன் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

ஈரோடு: பூசாரி சென்னிமலை முதல், 2-வது. 3-வது வீதிகள், வரதராஜா வீதி, என்.ஜி.ஜி.ஓ. காலனி 4-வது மற்றும் 5-வது வீதிகள் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி: செட்டிகுறிச்சி துணை மின் நிலையத்தின் நாலாட்டின்புதூா் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளான கட்டாலங்குளம், செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை
(பிப்.2) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.காளிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.