தமிழகத்தில் 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் ஒரு மாதத்தில் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்கள் மற்றும் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஆகியோருக்கு புதிய அட்டைகள் தயாராகி வருகின்றன. தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்