சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 7 முதல் 10 வயதுடைய 3 பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு நான்காம் வகுப்பு பயிலும் மாணவர் சாக்லேட் கொடுத்து ஏமாற்றி அங்கிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்கனவே இருந்த சில ஆண்கள் மாணவிகளை வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.