கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

முழுவதுமாக குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ படையில் 100 பேர் வரை பயணிக்கலாம். இதற்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சேவையானது, தொந்தரவில்லாத பயணத்திற்கு நவீன மற்றும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து அமைப்பை வழங்குவதற்காக கொச்சியின் சிக்கலான உப்பங்கழி நெட்வொர்க்கைப் பயன்படுத்தும்.