ஸ்பெயின் நாட்டு அரசு கொரோனா காலத்தில் தொற்றினை மிகவும் மோசமாக கையாண்டது. இதனால் ஸ்பெயின் அரசன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அன்றிலிருந்து அந்நாட்டின் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் எந்தவித சிறந்த சேவையும் அளிக்கப்படவில்லை எனவும் ஊழியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் அந்நாட்டு அரசின் மேல் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அரசை கண்டிக்கும் விதமாக தலைநகர் மாட்ரீட் பகுதியில் மக்கள் அனைவரும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் மக்கள் அனைவரும் “சுகாதாரத் துறையை பாதுகாக்க அரசினுடைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்” எனக் கூறி தங்களது கைகளை தட்டியும் இசை இசைத்தும் நடனமாடியும் சென்றனர்.