ஷிரோமணி அகாலிதளத்தின் தலைவரும். முன்னாள் பஞ்சாப் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் (95) சற்றுமுன் காலமானார். உடல்நலக்குறைவால் மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. பஞ்சாபில் 5 முறை முதல்வராக இருந்தவர் பிரகாஷ் சிங் பாதல். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது மறைவை அடுத்து, நாடு முழுவதும் இரண்டு நாள் துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.