மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. தற்போது வரை 13 தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையினுள் 14  ஆவது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் 14ஆவது தவணை வழங்கப்படும் என்று தெரிகிறது. அதில் சிலருக்கு 4000 கிடைக்க இருக்கிறது. 13ஆவது தவணைக்கு முன் அனைத்து விவசாயிகளையும் KYC சரிபார்க்க சொன்னது மத்திய அரசு. அதை செய்ய தவறியவர்களுக்கு 13ஆவது தவணை கிடைக்கவில்லை. அவர்களுக்கு தற்போது சேர்த்து வழங்கப்பட இருக்கிறது.