டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால் நேற்று இரவு முதலே நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயன்று வருகிறார்கள்.