ஜன்னலைத் திறந்து வைத்து உடலுறவு கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எதிராக 44 வயதான பக்கத்து பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த 44 வயதுடைய பெண், அளித்துள்ள புகாரில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் புதுமணத் தம்பதியின் அந்தரங்கத் தருணங்களின் சத்தம் எங்களுக்கு கேட்கிறது. அது எங்கள் வீட்டின் அமைதியான சூழலைக் குலைக்கிறது. அவர்கள் உடலுறவு கொள்ளும்போது வேண்டுமென்றே ஜன்னலைத் திறந்து வைக்கின்றனர்.

ஜன்னலை மூடச் சொன்னால் மோசமாக நடந்துகொள்கின்றனர். இது பற்றி புகார் அளித்தால் என்னையும், என் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவோம் என மிரட்டுகின்றனர். இதற்கு வீட்டின் உரிமையாளரும் உடந்தையாக இருக்கிறார். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் ஏற்கனவே போலீசார், ஐபிசி 504, 506, 509 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.