டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நேற்று கெஜ்ரிவாலை கைது செய்தது.

ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைக்கு நாடு முழுவதிலும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.