ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏஎப்சி (AFC) மகளிர் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஈரான் அணியின் 5 வீராங்கனைகள், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்ற ஈரான் மகளிர் கால்பந்து அணி, தென் கொரியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தின்போது, ஈரானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மௌனம் காத்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழலில், வீராங்கனைகளின் இந்தச் செயல் ஒருவித எதிர்ப்பாகவும், துக்கத்தைப் பகிரும் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது. இந்தச் செயலுக்கு ஈரானின் சில தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஈரான் திரும்பினால் வீராங்கனைகள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்தன. இதனால், ஆசியக் கோப்பை தொடரிலிருந்து ஈரான் அணி வெளியேறிய பிறகு, அந்த அணியைச் சேர்ந்த 5 வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவிலேயே தங்குவதற்கு அனுமதி கோரி, தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஈரான் அணியின் கடைசிப் போட்டிக்குப் பிறகு, விமான நிலையத்திற்கு வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈரானிய ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் பேருந்திலிருந்த வீராங்கனைகளிடம், “நீங்கள் ஈரான் திரும்ப விரும்பவில்லை என்றால், உதவி கோருங்கள் ” என்று சைகை மூலம் வலியுறுத்தினர். அந்தப் பேருந்திலிருந்த வீராங்கனைகள் ‘SOS’ சைகையைக் காட்டியதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
🚨 BREAKING: In an incredible moment, the Iranian Women’s Football Team REFUSED to sing the Islamic Regime’s national anthem at the opening match of the Asian Cup
THAT is the real feminist cause.
Iranian women are STANDING UP with America’s help! 🇺🇸🇮🇷pic.twitter.com/StlKNVZTKM
— Eric Daugherty (@EricLDaugh) March 3, 2026
விளையாட்டு, அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவை இந்த விவகாரத்தில் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதற்கு இது ஒரு சான்றாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 வீராங்கனைகளுக்குத் தஞ்சம் வழங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அணியின் மற்ற வீராங்கனைகளின் நிலை என்ன என்பது குறித்த கவலைகள் நீடிக்கின்றன. குடும்பத்தினர் மீதான அச்சம் ஒருபுறம் இருந்தாலும், சொந்த நாட்டிற்குத் திரும்பினால் நேரிடும் ஆபத்து காரணமாக, பல வீராங்கனைகள் இக்கட்டான சூழலில் உள்ளனர். மேலும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்து வீராங்கனைகளுக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், அவர்களை ஈரான் திரும்ப வற்புறுத்தக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
One last effort to save the Iranian women’s football team
Iranians camping outside the hotel temporarily stopped the bus carrying the women’s team to the airport and pleaded with the players to signal SOS if they wanted to stay.
6 players have already sought asylum pic.twitter.com/kPZbC4Wmjh
— Throwback Iran (@Tarikh_Eran) March 10, 2026
