மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் மோடியால் அடிக்கடி இங்கு வந்து போக முடிகிறது.

அண்ணாமலை வாய்க்கு வந்தது போல் பேச முடிகிறது. முதலமைச்சர் எங்களைப் போன்றவர்களை அடக்கி வாசிக்க சொல்வதால் தான் அண்ணாமலை போன்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.