சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. மக்கள் பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறது அதிமுக. கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 25 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் மக்கள் எப்படி மதிப்பர்?. மக்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் பணியை எதிர்க்கட்சி எனும் முறையில் செய்து வருகிறோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று அவர் பேசினார்.