அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. மருத்துவரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் 3 தினங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்தனர். அதன்பின் மருத்துவர்கள் அளித்த விவரங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை ஆயத்தம் ஆகியுள்ளனர்.