தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.