மலையாள சினிமாவில் ஜல்லிக்கட்டு, அங்கமாலி டைரீஸ் என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்கி குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் லிஜோஜோஸ் பெள்ளிசேரி. இப்போது மம்முட்டி நடிப்பில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் பொள்ளாச்சியை கதைக் களமாக கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் மம்முட்டி ஒரு சாதாரண எளிய கிராமத்து மனிதனாக நடித்து உள்ளார்.

இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த போஸ்டர்கள் அவ்வப்போது வெளியாகி மிகப் பெரிய ஆச்சரியத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற ஜனவரி 19ம் தேதி வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.