2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.