தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்பிறகு தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 13 வருடங்களாக கேரளாவில் பல ரிசார்ட்டுகள் வைத்துள்ள தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் 4 வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் இணையதளத்தில் சமீப காலமாகவே தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இந்த தகவல்களில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து மேனகா கூறியதாவது, இது பரபரப்புக்காக கிளப்பி விடப்படும் செய்தி. இது போன்ற செய்திகளை நாங்கள் பார்க்க கூட விரும்புவது கிடையாது. மேலும் கீர்த்தியின் திருமணம் தொடர்பான சோசியல் மீடியாவின் தீனிக்கு இதுதான் எங்களுடைய பதில் என்று கூறியுள்ளார்.