தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி.

இந்த நிலையில் தற்போது பல சினிமா வாய்ப்புகள் இவருடைய வீட்டு கதவை தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் இவருடைய ரசிகர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நபருடன், கீர்த்தி டேட்டிங் செய்வதாகவும், அது அவரது வருங்கால கணவர் எனவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. இந்நிலையில் இதற்கு கீர்த்தி, தங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். கீர்த்திக்கு துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபர்ஹான் பின் லியாகத் என்பவருடன் சில காலமாக நட்பு உள்ளது.