நடிகை கங்கானா எப்பொழுதுமே தன்னுடைய பேச்சுக்களை தைரியமாக வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சந்திரமுகி 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் ஹிந்தியில் சில முக்கிய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இதனை சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள கங்கனா, “சில அரசியல்வாதிகள் தனக்கு எதிராக உள்ளனர். நான் துக்டே குழுக்கள், காலிஸ்தான் குழுக்களை கண்டித்துள்ளேன். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று பாதுகாப்பு கேட்டேன். கிடைத்து இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்