மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் அஞ்சலி நாயர். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.  இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர். தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கும் முன்பு, 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார். பின்னர் வினீத் ஸ்ரீனிவாசனின் லா கொச்சின் உட்பட பல இசை ஆல்பங்களில் நடித்தார். அவர் “பந்தங்கள் பந்தங்களா” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர் தமிழ் நடிகர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் காதலை சொன்னதாகவும் அதனை மறுத்ததால் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததாகவும் அஞ்சலி தெரிவித்துள்ளார். ஒருமுறை ரயில் முன் அந்த நடிகர் தள்ளிவிட முயன்றதாக கூறியிருக்கும் அஞ்சலி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்