நடிகர் விஜய் ஆண்டனி சசி இயக்கத்தில் சென்ற 16ஆம் வருடம் பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வெற்றி பெற்று பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்த திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் படத்தை அவரே இயக்கியும் வருகின்றார். அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த நிலையில் ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்து பலரையும் கவர்ந்து வருகின்றது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, வடக்கனும் கிழக்கனும் தெற்கனும் மேற்கனும்… நம்மைப் போல் தான் குடும்பத்தை காப்பாற்ற தினமும் போராடி வாழும் இன்னொரு சக ஏழை மனிதன் தான். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என பதிவிட்டு இருக்கின்றார். இவரின் இந்த கருத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்து கொண்டிருக்கிறது.