நடிகர் விஷால் இப்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து இயக்குனர் ஹரி டைரக்டில் விஷால் தன் 34-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் போன்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க முதலில் நடிகை ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் கால்ஷீட் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விஷாலின் 34-வது திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.