அஜித் நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனரானவர் எஸ்.ஜே.சூர்யா. இதையடுத்து விஜய் நடித்த குஷி படத்தை இயக்கி, பின் அன்பே ஆருயிரே திரைப்படத்தில் அவரே ஹீரோவும் ஆகிவிட்டார். அண்மை காலமாக ஹீரோ, வில்லன் என வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர், விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ஜிகர்தண்டா 2 போன்ற படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா கூறியதாவது “ஏற்கனவே சிம்பு நடிப்பில் ஏசி என்ற ஒரு திரைப்படத்தை நான் இயக்குவதாக இருந்தது. எனினும் அந்த படம் அப்போது கைவிடப்பட்டது. அதில் சிம்பு கேங்ஸ்டராகவும், பசு வளர்ப்பவராகவும் 2 வேடங்களில் நடிக்கயிருந்தார். அந்த கதை பற்றி மாநாடு படத்தில் நடித்தபோது மீண்டும் சிம்புவுடன் விவாதித்தேன். ஆகவே சரியான சந்தர்ப்பம் அமையும்போது அப்படத்தை சிம்புவை வைத்து இயக்குவேன் என தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.