தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர்‌ பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் மனைவி குறித்து பொய்யான கருத்துகளை சொன்னவரை ராம்சரண் ரசிகர்கள் அடித்து துவைத்துள்ளனர்.

சுனிஷித் என்பவர், “ராம்சரண் மனைவி உபாசானா எனது தோழிதான். இருவரும் இணைந்து கோவா சென்றுள்ளோம்” என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இவரை பொதுவெளியில் பார்த்த ரசிகர்கள், அடித்து துவைத்து, தனது அவதூறு கருத்துக்கு மன்னிப்பு கேட்க வைத்து அனுப்பினர். இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.