கர்நாடக மாநிலத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடம் கோமியம் கொண்டு கழுவப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள எம்வி கல்லூரியில் திரையரங்க வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொண்டார்.

இந்நிலையில், கல்லூரி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜூவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தினர். மேலும், மாணவர்கள் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்துள்ளனர்.