அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் அது சம்மதமாக கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் பட்டியலின மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின், தொடர்ந்து அந்த மாணவர் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் ஜாமின் கோரி SEST சிறப்பு நீதி மன்றத்தில் மனு தக்கல் செய்தார். அதில், மாணவியின் சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனை ஏற்க்க மறுத்த நீதிமன்றம் ஜாமின் மனுவை நிராகரித்தது.