தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷை தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக கதிரேசன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் வழக்கின் விசாரணைக்காக அவரின் மரபணுவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று அவரின் மனைவி மீனாட்சி மனு  மருத்துவமனை டீனிடம் மனு அளித்துள்ளார். இதனால் தனுசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.