தென்னிந்திய சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 28-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதியின் லியோ திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் யூட்யூபர் ஏ.எல். சூர்யா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் ஜூன் மாதம் நடைபெற இருப்பதாகவும் இதனால் உடனடியாக த்ரிஷாவை லியோ படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக திரிஷா தன்னுடைய காலில் விழுந்து கதறி அழுததால் அவரை நான் காதலிக்க சம்மதம் தெரிவித்தேன் என்றும், நடிகர் விக்ரம் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார் என்றும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தனக்கும் திரிஷாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தாங்கள் திருமணம் செய்து கொள்வது நடிகர் விஜய்க்கு பிடிக்காததால் சமீப காலமாக த்ரிஷா என்னிடம் போனில் சரியாக பேசவில்லை எனவும் ஏ.எல். சூர்யா கூறியுள்ளார். மேலும் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதால் இப்படி எல்லாம் பேசுவதாக த்ரிஷாவின் ரசிகர்கள் கூறிவரும் நிலையில் உடனடியாக இந்த விவகாரத்துக்கு திரிஷா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.