தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு அதிக சம்பளம் கேட்டதால் தயாரிப்பாளர் லலித் மற்றும் இயக்குனர் விஜய் சுந்தர் ஆகியோர் சிம்புவை நடிக்க வைக்க வேண்டும் என்ற திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் தீயாக பரவி வரும் நிலையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.