பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான்கான் அடுத்தடுத்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு வந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்ததையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி பிரார் இப்போது சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டியில் “நாங்கள் சல்மான்கானை கண்டிப்பாக கொல்வோம். நாங்கள் முன்பே கூறியது போன்று சல்மான்கான் மட்டுமின்றி நாங்கள்  உயிருடன் இருக்கும் வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக தங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்” என கூறினார்.