ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சென்ற 2011-ம் வருடம் வெளியான படம் “காஞ்சனா”. நகைச்சுவை கலந்த திகில் கதைக் களத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து கோவை சரளா, ராய் லட்சுமி, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

அதோடு முக்கியமான கதாபாத்திரமான திருநங்கை ரோலில் சரத்குமார் நடித்திருந்தார். இவரின் மகளாக திருநங்கை பிரியா நடித்து இருந்தார். இந்த நிலையில் பிரியா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது “காஞ்சனா திரைப்படத்தில் நடித்ததுதான் நான் செய்த ரொம்ப பெரிய தவறு.

இந்த படத்திற்கு முன்னதாக நான் சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். இதில் நடித்ததால் நான் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அந்த படத்திற்கு பிறகு எனக்கு எந்தவொரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. மேலும் வேறு வேலை கூட எதுவும் பார்க்க முடியவில்லை” என அவர் வருத்தத்துடன் கூறினார்.