தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய “வாரிசு” படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நடிகர் விஜய் டைரக்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு டைரக்டில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதியுடன் “வாரிசு” படத்தில் இணைந்து நடித்த நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன், விஜய்யை பற்றி சில தகவல்களை பகிர்ந்து உள்ளார்.  அதாவது, “வாரிசு” படத்தின் முதல் நாள் சூட்டிங்கில் விஜய் எதுவும் பேசவில்லை.

பின் அவர் அடுத்த நாள் முதல் சாதாரணமாக பேச துவங்கினார். அப்போது தன் மகன் சஞ்சய் பற்றியும் விஜய் பேசினார். அவர் சஞ்சயை ஒரு ஹீரோவாக தான் பார்க்க ஆசைபட்டார். எனினும் சஞ்சய் டைரக்ஷன் மீது தான் ஆர்வமாக இருக்கிறான் என விஜய் வருத்தத்துடன் தெரிவித்ததாக நடிகை அர்ச்சனா தெரிவித்துள்ளார்.