தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அர்ஜுன். கர்நாடகவை பூர்விகமாகக் கொண்ட அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகர் அர்ஜுன் பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் நடிகர் அர்ஜுனுக்கு பாடி டிமாண்ட் அதிகம் என்றும் மது குடிக்கும் பழக்கம் அதிகம் என்றும் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக அனைத்திலும் அர்ஜுன் அளவோடு இருப்பார் என்று பயில்வான் கூறியுள்ளார். நடிகர் அர்ஜுன் நடிகைகளுடன் நெருங்கி பழகக் கூடியவர் என்றாலும் அவர்கள் விருப்பமில்லாவிட்டால் அவர்கள் பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார். இந்த விஷயத்தில் அர்ஜுனை நடிகைகள் யாருமே குறை சொல்ல முடியாது.

இதுவரை நடிகர் அர்ஜுன் மீது யாருமே பாலியல் புகார் தெரிவிக்காத நிலையில் நடிகை சுருதி அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தது முழுக்க முழுக்க பொய் என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார். அதோடு நடிகர் ரஞ்சிதா திரையுலகை வி ட்டு விலகியதற்கும் நடிகர் அர்ஜுனுக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்த நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.