பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் ஆளவந்தான், கேஜிஎப் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் . இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் தான் நடிக்க வந்த புதிதில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சக நடிகரின் உதட்டுடன் தன்னுடைய உதடு உரசி விட்டது. அந்தக் காட்சிக்கு பிறகு குமட்டிக் கொண்டு வாந்தி  எடுத்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சக நடிகர் ஒருவருடைய உதடுகள் தற்செயலாக என்னுடைய உதடுகள் மேல்பட்டது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது என அவர் தெரிவித்தார். ஆனால் இது எந்த படத்தில் நடந்தது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.