பெங்களூரில் இன்று நடைபெற்ற ‘சித்தா’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், நீண்ட காலமாக இருக்கும் பிரச்னையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து  அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.