சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் ஒருவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சந்தைதிடல் அருகே இருக்கும் நகை கடை முன்பு அவரது மனைவியும், மகளும் உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவர் மீதும் தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.