தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காட்டு தோட்டம் கார்மல் நகரில் லாரி டிரைவரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் பிரீத்தி(19) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெயலட்சுமியும் பிரீத்தியும் வீட்டில் இருந்தனர். அப்போது பிரீத்தி பக்கத்து வீட்டிற்கு சென்று பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை ஜெயலட்சுமி கண்டித்ததால் கோபமடைந்த பிரீத்தி அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரீத்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.