தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சோற்றுதுறை கீழத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகமும், தமிழ்செல்வனும் தினமும் திருவையாறில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் இறக்கி விட்டு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இருவரும் சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றி கொண்டு மார்க்கெட்டில் இறக்கி வைத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கண்டியூர் சுற்றுகுளம் அருகே சென்ற போது சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரியும் சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகம், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.