பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும் ரிபேரோ தோல்வியடைந்ததால் அங்கிருந்தவர்கள் அவர்களை பார்த்து சிரிக்க தொடங்கியுள்ளனர்.

இதனை எட்கர் மற்றும் ரிபேரோ பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்களைப் பார்த்து சிரித்த நபர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 12 வயது சிறுமி உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய எட்கர் மற்றும் ரிப்பேரோ ஆகிய இரண்டு நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.