தொலைநிலைக் கல்வியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற வருகின்ற ஜூலை 5ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வியில் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை, பட்டைய மற்றும் சான்றிதழ் படிப்புகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு வருகின்ற ஜூலை 5ஆம் தேதி தொடங்குகின்றது.

இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதேசமயம் பல்கலைக்கழகத்தின் 64 கற்றல் உதவி மையம் மூலமாகவும் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.