கேரள மாநிலம் பாலக்காட்டில் தொண்டையில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்புளசேரியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது ஜலால் என்ற சிறுவன் அங்கன்வாடிக்கு போகும்போது வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றுள்ளான். இந்நிலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்டபோது திடீரென தொண்டைக் குழியில் உணவு சிக்கி உள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.