கேரள மாநிலம் பாலக்காட்டில் தொண்டையில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செர்புளசேரியை சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் முகமது ஜலால் என்ற சிறுவன் அங்கன்வாடிக்கு போகும்போது வீட்டில் இருந்து உணவு கொண்டு சென்றுள்ளான். இந்நிலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்டபோது திடீரென தொண்டைக் குழியில் உணவு சிக்கி உள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உயிருக்கு போராடிய சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தொண்டைக்குழியில் உணவு சிக்கி மூன்றரை வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more