அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று நடத்தினார். இதில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுகவின் ஆணிவேர் தொண்டர்கள் தான்.

நிரந்தர பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை ரத்து செய்த நயவஞ்சகர்களை நாம் ஓட ஓட விரட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தொண்டர்களில் ஒருவனை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது” என கூறியுள்ளார்.