சென்னையில் இருந்து விமானங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் செல்லும் பயணிகள் கூட்டம் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர் அரசை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் பயணச்சீட்டு கட்டணம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னையிலிருந்து சுற்றுலா தளமான தாய்லாந்துக்கு ஒன்பதாயிரம் ரூபாய் வழக்கமாக வசூல் செய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் 27 முதல் 29ஆம் தேதி வரை 22,000 முதல் 39 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அதனைப் போலவே சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களான சென்னை மற்றும் தூத்துக்குடி விமானங்களிலும் கட்டணம் 11 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.