நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது பைபர் படகு மற்றும் விசை படகுகளை  கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதேபோல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. ஒரு சில பகுதிகளில் மட்டும் அறுவடைப்பணிகள் முழு வீச்சில்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தது.