மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது  சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கியான் சிங் (63) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அவருக்கு திடீரென்று கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கியான் சிங்கின் சொந்த ஊர் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.