நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த 12ஆம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து பேச வரும் 12-ம் தேதி பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை நாமக்கல்லில் நின்று கடந்தமுறை திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரத்தில் ஏணி சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது.

திமுகவுடன் கடந்த மக்களவைத் தேர்தலின் போது கூட்டணியிலிருந்த 2 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக தலைமை 2 கட்சிகளுக்கும் ஒரு தொகுதியை ஒதுக்க உள்ள நிலையில், 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஏற்கனவே 12ம் தேதி தொகுதி பங்கீடு குறித்து பேச பேச விசிக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.